தமிழ்நாடு

நாகை மீனவர்கள் மீது நடுக்கடலில் துப்பாக்கி சூடு: மர்ம நபர்களின் கைவரிசையால் பரபரப்பு!

Published

on

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையினர் அவ்வபோது துப்பாக்கிச்சூடு நடத்தி வருவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இதில் பலர் மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பதும் காயம் அடைந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சற்றுமுன் நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்பது தெரியவில்லை. மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் கலைச்செல்வன் என்ற மீனவருக்கு துப்பாக்கி குண்டு பாய்ந்து உள்ளதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை இலங்கை கடற்படையினர் நடத்தினார்களா? அல்லது வேறு யாரும் நடத்தினார்களா? என்பது குறித்து விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. துப்பாக்கு சூடுக்கு உள்ளான மீனவர்களிடம் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் அடையாளம் தெரியாத நபர்கள் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நாகை மீனவர்கள் மீது நடுக்கடலில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version