Connect with us

தமிழ்நாடு

நாகை மீனவர்கள் மீது நடுக்கடலில் துப்பாக்கி சூடு: மர்ம நபர்களின் கைவரிசையால் பரபரப்பு!

Published

on

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையினர் அவ்வபோது துப்பாக்கிச்சூடு நடத்தி வருவது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இதில் பலர் மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பதும் காயம் அடைந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சற்றுமுன் நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்பது தெரியவில்லை. மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் கலைச்செல்வன் என்ற மீனவருக்கு துப்பாக்கி குண்டு பாய்ந்து உள்ளதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை இலங்கை கடற்படையினர் நடத்தினார்களா? அல்லது வேறு யாரும் நடத்தினார்களா? என்பது குறித்து விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. துப்பாக்கு சூடுக்கு உள்ளான மீனவர்களிடம் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் அடையாளம் தெரியாத நபர்கள் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நாகை மீனவர்கள் மீது நடுக்கடலில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா5 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்6 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா6 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்6 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!