சினிமா செய்திகள்
மீராமிதுன் மீது குண்டர் சட்டம் பாய்கிறதா? கருத்து தெரிவிக்காத திரையுலக பிரபலங்கள்!
நடிகை மீரா மிதுன் மீது குண்டர் சட்டம் பாய வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறையினர் இது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு குற்றத்தை தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் செய்பவர் மீது குண்டர் சட்டம் பாயும் என்பதும் சமீபத்தில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்த சிலர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட மீராமீதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் மீராமிதுன் மீது இதே ரீதியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதை அடுத்து அவர் மீது குண்டர் சட்டம் பாய வாய்ப்பு இருப்பதாகவும், மீராமிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீசார் பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் ஒரு வருடத்திற்கு ஜாமீனில் வெளிவர முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீராமிதுன் கைது குறித்து பெரும்பாலான திரையுலக பிரபலங்கள் எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.