தமிழ்நாடு
கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீதான குண்டர் சட்டம் ரத்து: நீதிமன்றம் உத்தரவு!
![karuppar-koottam-jpg_1200x900 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/karuppar-koottam-jpg_1200x900.jpg)
கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தியதாக கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்த செந்தில் வாசன், சுரேந்திரன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்பதும் அதன் பின்னர் சுரேந்திரன், செந்தில் வாசன், மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் தங்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று சுரேந்திரன், செந்தில் வாசன் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது செந்தில் வாசன், சுரேந்திரன் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் தொகுப்பாளர் சுரேந்திரன் மற்றும் செந்தில் வாசன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.