இந்தியா

வங்கக்கடலில் புதிய புயல்: பெயர் என்ன தெரியுமா?

Published

on

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறித்து ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் நேற்று மாலை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி வடக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது என்றும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் வங்கக் கடலில் உருவாகும் இந்த புதிய புயலுக்கு ’குலாப்’ புயல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த புயல் காரணமாக தமிழகம் உள்பட வங்கக் கடலை ஒட்டிய பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த புயல் நகரும் திசையை பொறுத்துதான் எந்த பகுதியில் இந்த புயல் கரையை கடக்கும் என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியும் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த புயல் ஒடிசா – ஆந்திரா இடையே கரையை கடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த புயல் காரணமாக நாகை, காரைக்கால், புதுச்சேரி, பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version