இந்தியா

அதானி மருத்துவமனையில் 1000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம்: அதிர்ச்சி தகவல்!

Published

on

பிரபல தொழிலதிபர் அதானி குஜராத்தில் நடத்தி வரும் மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணமடைந்துள்ளதாக குஜராத் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதானி பவுண்டேசனுக்கு சொந்தமான ஜிகே பொது மருத்துவமனை குஜராத்தின் குச் மாவட்டத்தில் உள்ளது. இந்த மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு தொடர்பாக குஜராத் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த குஜராத் துணை முதல்வர் நிதின் படேல், கடந்த 5 ஆண்டுகளில் இம்மருத்துவமனையில் 1,018 குழந்தைகள் இறந்துள்ளதாகத் தெரிவித்தார்.

எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், 2014-15-ம் ஆண்டில் 188 குழந்தைகள், 2015-16-ம் ஆண்டில் 187 குழந்தைகள், 2016-17-ம் ஆண்டில் 208 குழந்தைகள், 2017-18-ம் ஆண்டில் 276 குழந்தைகள், 2018-19-ம் ஆண்டில் 159 குழந்தைகள் அதானியின் ஜிகே பொது மருத்துவமனையில் பல்வேறு நோய்கள் மற்றும் மருத்துவக் கோளாறுகள் காரணமாக இறந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் ஒரே மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருப்பது குஜராத்தில் இந்த மருத்துவமனையின் மீது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version