வணிகம்
நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்தது!
2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் 1 லட்சத்து 3 ஆயிரத்து 4 நூற்று 92 ரூபாய் என்று மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதிலிருந்து இந்த வசூல் மூன்றாம் மிகப்பெரியதாக உள்ளது.
இதற்கு முன்பு 2019 ஏப்ரல் மற்றும் 2019 மார்ச் மாதம்தான் ஜிஎஸ்டி வசூல் அதிகளவில் செய்யப்பட்டு இருந்தது.
கடந்த இரண்டு மாதங்களாக ஜிஎஸ்ட் வசூல் சரிந்து இருந்து நிலையில் நவம்பர் மாதம் 6 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த ஜிஸ்ட் வசூலில், மத்திய ஜிஎஸ்டி 19,592 கோடி ரூபாய், மாநில ஜிஎஸ்டி வசூல் 27, 144 கோடி ரூபாய், ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்ட் வசூல் 49,028 கோடி ரூபாய், செஸ் 7,727 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 77.38 லட்சம் வணிக நிறுவனங்கள் மற்றும் நபர்கள் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்துள்ளனர்.