வணிகம்
ஜிஎஸ்டி வசூல் அக்டோபர் மாதம் அதிகரிப்பு!
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்ட் வசூல் அக்டோபர் மாதம் 3.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜிஎஸ்ட் வசூல் செப்டம்பர் மாதம் 91,916 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே அக்டோபர் மாதம் 3.8 சதவீதம் அதிகரித்து 95,380 கோடி ரூபாயை வசூல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது 1 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் 5.3 சதவீதம் சரிந்துள்ளது.
அக்டோபர் மாதம் மொத்தம் 73.83 லட்சம் வணிகர்கள் ஜிஎஸ்டி தாக்கல் செய்துள்ளனர்.