தமிழ்நாடு

வெளியானது குரூப் 4 தேர்வு முடிவுகள்: மகிழ்ச்சியில் தேர்வர்கள்!

Published

on

கிராம நிர்வாக அலுவலர் உள்பட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளில் வரும் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, கடந்த வருடம் (2022) ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதிலும் குரூப் 4 தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

குரூப் 4 தேர்வு

குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிடப்படுவதாக இருந்தது. இதனையடுத்து தேர்வை எழுதிய தேர்வர்கள், சமூக வலைதளங்களில் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரிக்கை விடுத்தனர். இதன்படி மார்ச் மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என, தேர்வை நடத்திய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்து இருந்த நிலையில் இன்று குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

காலிப் பணியிடங்கள்

குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியான போது, 7 ஆயிரத்து 301 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை கூடுதலாக அதிகரித்து, டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அவ்வகையில், 2 ஆயிரத்து 816 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 10 ஆயிரத்து 117 பணியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தேர்வர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

முடிவுகள் வெளியீடு

தேர்வர்கள் எதிர்ப்பார்த்த குரூப் 4 தேர்வு முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகளை TNPSC இணையதளத்தில் தேர்வர்கள் பார்த்துக் கொள்ளலாம். கட் ஆப் மதிப்பெண் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் இனிமேல் தான் தெரிய வரும்.

Trending

Exit mobile version