வேலைவாய்ப்பு

குரூப் 2 தேர்வு எழுதுபவர்களுக்கு ஓர் நற்செய்தி!

Published

on

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதுபவர்களுக்குத் தமிழக அரசு இணைய வழி இலவச பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனா தொற்று பரவுவதால் அரசு பணிக்கான தேர்வுகள் நடைபெறாமல் உள்ளது. தேர்வுக்குத் தயாராகும் நபர்களுக்குப் பயிற்சி மையங்களும் செயல்படாமல் உள்ளன.

எனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்குத் தயார் ஆகும் நபர்கள் வீட்டிலேயே பயிற்சிகளைப் பெறத் தமிழ்நாடு அரசு அரசு இணையதளம் (https://tamilnaducareerservices.tn.gov.in/) ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்த குரூப் தேர்வுக்கான பயிற்சி ஜூலை 5-ம் தேதி முதல் சிஸ்கோ வெப்-எக்ஸ் மூலமாக நடைபெறும். காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரையிலும் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும்.

பயிற்சி மட்டும் இல்லாமல் மாதிரி தேர்வுகளும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version