இந்தியா

ஒழுங்கா கையெழுத்து போடு!.. மணமகளுக்காக மணமகன் ஏற்ற ஒப்பந்தம்……

Published

on

திருமணம் என்றாலே பல மகிழ்ச்சியான சம்பவங்கள் நடப்பதுண்டு. அதிலும், மணமகனின் நண்பர்கள் செய்யும் அட்டகாசங்கள் தாங்காது. திருமணம் என்பதே வாழ்க்கையில் இரு மணங்கள் இணையும் ஒப்பந்தம்தான். இருவரும் இனிமேல் மகிழ்ச்சியாக வாழ்வோம், மனைவியை நான் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என கணவரும், கணவரின் மனம் புரிந்து நடந்துகொள்வேன் என மணமகளும் ஒப்பந்தம் செய்து கொள்வதுதான் திருமணம்.

இந்நிலையில், திருமணத்தன்று உண்மையிலேயே மணமகளுக்காக மணமகன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட சம்பவம் நடந்துள்ளது. ஆயுஸ் & ராதிகா இருவருக்கும் சமீபத்தில் நடந்தது. திருமண மண்டபத்தின் நுழைவு வாயிலில் ஆயுஷ் தடுத்து நிறுத்தப்பட்டு, இதில் கையெழுத்த பின்னரே உள்ளே நுழைய வேண்டும் என மணமகள் ராதிகாவின் உறவினர்கள் சில அந்த கையெழுத்தை மணமகனிடம் விளையாட்டாக வாங்கினர்.

அதில் முதல் கண்டிஷனாக ‘ராதிகா சொல்வது தான் எப்போது சரி, 2வது கண்டிஷனாக வருடத்திற்கு 2 அல்லது 2 முறை அவரை வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும், 3வதாக ராதிகா என்ன கேட்டாலும்,எப்போது கேட்டாலும் அதை வாங்கித்தர வேண்டும்’ என அதில் எழுதப்பட்டிருந்தது.மணமகனும் சிரித்தபடி அதை ஏற்றுக்கொண்டு அதில் கையெழுத்திட்டார்..

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version