இந்தியா

மணமேடையில் மணமகன் செய்த காரியம்..அதிர்ச்சி வீடியோ…திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்……

Published

on

ஒரு திருமணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடப்பது என்பதே இரு வீட்டாருக்கும் மகிழ்ச்சியான ஒன்றுதான். ஒருவர் சும்மா இருந்தல் ஒருவர் ஆரம்பித்து விடுவார். அல்லது திருமணத்திற்கு வரும் உறவினர்களாலும் பிரச்சனைகள்
ஏற்படுவதுண்டு. குறிப்பாக திருமணத்தில் ப்ரஸ்பரம் ஒருவருக்கொருவர் கொடுக்கும் மரியாதை முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அது தவறும்போது அங்கு அது வாக்குவாதத்திற்கும், மோதலுக்கும் வழி வகுக்கிறது. சில திருமணங்களில் மணமகன் மூலமாக கூட பிரச்சனை எழுவதுண்டு. இது தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

திருமண மேடையில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் நிற்க மாலையை மாற்றிக்கொள்ளும் சடங்கு நடக்கிறது. அப்போது மணமகன் மணமகளை நோக்கி மாலையை தூக்கி வீசுகிறார். இதைக்கண்டு மணமகள் அதிர்ச்சி அடைந்தாலும், கோபத்தை காட்டிக்கொள்ளாமல் அமைதியாக நிற்கிறார். இது கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் மணமகன் மீண்டும் அந்த மாலையை எடுக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

மணமகனின் செயலை கண்ட நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version