தமிழ்நாடு

அம்மா உணவகம் மெனுவில் மாற்றம்.. புதிய வரவுகள் என்ன?

Published

on

அம்மா உணவகம் உணவுப் பட்டியலை (மெனு) மற்ற உள்ள தாக சென்னை கார்ப்ரேஷன் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

2013-ம் ஆண்டு முதல் முன்னாள் முதல்வர் தொடங்கி வைத்த அம்மா உணவகம் சென்னை உள்ளிட்ட எல்லா நகரங்களிலும் செயல்பட்டு வருகிறது.

2021-ம் ஆண்டு திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா உணவகம் மூடப்படும் என்று கூறப்பட்டாலும், அவர்களும் இந்த திட்டத்தை மூடும் எண்ணம் திமுக அரசுக்கு இல்லை என அறிவித்தனர்.

அதனை மேலும் உறுதி செய்யும் விதமாக இப்போது அம்மா உணவகம் மெனுவில் மாற்றம் செய்ய உள்ளதாகச் சென்னை கார்ப்ரேஷன் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

புதிதாக அம்மா உணவகத்தில் வரும் உணவுப் பட்டியலில் ராஜ்மா, சன்னா போன்றவை சேர்க்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் 100 ரூபாய்க்கும் குறைவாக வசூல் செய்யும் சில அம்மா உணவகங்களை வேறு இடத்திற்கு மாற்றவும் திட்டமிட்டுள்ளனர்.

அம்மா உணவகம் திட்டம் ஏழை மக்களின் பசியை போக்கி வருவது தவிர்க்க முடியாத உண்மை என்றாலும் அது அரசுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தி வருகிறது என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அம்மா உணவகத்தில் காலையில் ஒரு ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்குப் பொங்கல் வழங்கப்படுகிறது. மதியம் 3 ரூபாய்க்குத் தயிர் சாதம், 5 ரூபாய்க்குச் சாம்பார் சாதம், புதினா சாதம், தக்காளி சாதம் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. இரவு நேரங்களில் சப்பாத்தி சாம்பார் வழங்கப்படுகிறது. விரைவில் அதில் ராஜ்மா, சன்னா உள்ளிட்டவை சேர்க்கப்பட உள்ளன.

Trending

Exit mobile version