வணிகம்
பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு மீண்டும் ஒரு பேக்கேஜ் அறிவிக்க வாய்ப்பு!
கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க மீண்டும் ஒரு பேக்கேஜை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.
அதன் அடுத்த கட்டமாக மீண்டும் ஒரு பொருளாதார மீட்டெடுப்பு பேக்கேஜை அறிவிப்பதற்கான பணிகளில் நிதி அமைச்சகம் செயல்பட்டு வருவதாக, பெயர் குறிப்பிட விரும்பாத நிதி அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.
பல்வேறு மத்திய அமைச்சகங்களிடம் இருந்து, நிதி அமைச்சகத்துக்கு வந்த கோரிக்கையை ஏற்று நிதி அமைச்சகம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.