இந்தியா
முகேஷ் அம்பானி நிறுவனத்தில் அதிரடி ரெய்டு.. கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்னென்ன தெரியுமா?
மத்திய அரசுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படும் முகேஷ் அம்பானியின் நிறுவனத்தில் அதிரடியாக சோதனை செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
னவரி 1ஆம்தேதி முதல் BIS என்ற அமைப்பால் குறிப்பிடப்பட்ட தர கட்டுப்பாடு உடன் கூடிய பொம்மைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் மற்றும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று விதிகளை மத்திய அரசு கட்டாயமாகியுள்ளது.
இந்த விதிகளை மீறிய பொம்மை தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் BIS இயக்குனர் பிரமோத் குமார் திவாரி அவர்கள் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ஹேம்லீஸ் மற்றும் ஆர்ச்சிஸ் நிறுவனம் உள்பட பல்வேறு இடங்களில் சோதனை செய்ததில் BIS-ஆல் குறிப்பிடப்பட்ட நெறிமுறைகளுக்கு இணங்காமல் பொம்மை விற்பனை செய்ததாக சுமார் 18,000 பொம்மைகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களில் 44 பொம்மை விற்பனை நிலையங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் பெரிய கடைகள் சிறிய கடைகள் உட்பட மொத்தம் 18 ஆயிரம் பொம்மைகள் கைப்பற்றப்பட்டதலாவும் இதில் முகேஷ் அம்பானியின் ஹேம்லீஸ் மற்றும் ஆர்ச்சிஸ் நிறுவனமும் ஒன்று என்றும் கூறப்படுகிறது.
BIS விதிமுறைகளை மீறி பொம்மைகளை விற்பனை செய்ததாக பொம்மை விற்பனையாளர்களுக்கு எதிராக பல புகார்கள் வெளிவந்ததை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மத்திய நுகர்வோர் ஆணையம் அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் உள்ளிட்ட இகாமர்ஸ் நிறுவனங்களுக்கும் பொம்மைகளின் தரக்கட்டப்பாடு உத்தரவை மீறியதாக நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து BIS இயக்குனர் பிரமோத் குமார் திவாரி கூறுகையில் பொம்மை விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பொம்மைகள் BIS வகுத்த கொள்கைகள மீறி பொம்மைகள் தயாரிப்பதாக புகார்கள் வந்ததால் நாடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது என்பதும் குறிப்பாக ஹேம்லீஸ் மற்றும் ஆர்ச்சிஸ் மட்டும் இன்றி அனைத்து மால்கள் மற்றும் விமான நிலையங்களில் அமைந்துள்ள பல நிறுவனங்களின் விற்பனை கடைகளில் சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 28 முதல் ஜனவரி 12ஆம் தேதி வரையிலான சோதனையில் இதுவரை 80 ஆயிரம் பொம்மைகள் கைப்பற்றப்பட்டதலாகவும் விதிகளை மீறி விற்பனை செய்த கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.