தமிழ்நாடு
ஆளுநர் மாளிகை செலவு விவரங்கள் எங்கே? நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி!
தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தனி தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது ஆளுநருக்கு எதிராக உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற மாண்புக்கு அரசியல் நோக்கத்தோடு ஆளுநர் இடையூறு செய்தால், கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஒதுக்கப்பட்ட 18 கோடி ரூபாயில் 11.32 கோடி ரூபாய் ஆளுநர் மாளிகை கணக்கிற்கு மாற்றபட்டுள்ளது. ஆளுநர் மாளிகை செலவு செய்த 11.32 கோடி ரூபாய்க்கான செலவு விவரங்கள் எதுவும் அரசுக்கு வழங்கப்படவில்லை.
அட்சய பாத்திரம் என்ற பெயரை சொல்லி கவனர் மாளிகை கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி மாணவர்கள் கூட்டத்திற்கு ரூபாய் 5 லட்சம், ஊட்டி ராஜ்பவனில் நடந்த கலாசார நிகழ்வுக்கு ரூபாய் 3 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை செலவினங்களில் விதிமீறல்கள் தடுக்கப்படும். விதிமுறைகளில் படிதான் செலவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை உடனடியாக கொண்டுவருவேன் என்றார்.