தமிழ்நாடு
தமிழக ஆளுனரின் டெல்லி பயணம் திடீர் ரத்து: என்ன காரணம்?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம் செய்ய இருந்த நிலையில் திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார். இந்த மசோதாவை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் குறிப்புகளில் அனுப்பியதாகவும் நீட் விலக்கு மசோதா சமூக நீதிக்கு எதிரானது என்று குறிப்பு எழுதி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்பதும் அதற்காக நாளை மறுநாள் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் கூட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்ல இருந்ததாகவும் அவர் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருடன் ஆலோசனை செய்ய இருந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால் ஆளுனர் ஆர்.என்.ரவி அவர்களின் டெல்லி பயணம் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டதாக கவர்னர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை மறுநாள் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் இன்று தமிழக ஆளுநரின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.