தமிழ்நாடு
ஆளுநர் பன்வாரிலால் டெல்லி பயணம்: பின்னணி என்ன?
பிரதமர் மோடியை சந்திக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மதியம் டெல்லி செல்ல உள்ளார். அவர் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து தமிழக விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார் என பேசப்படுகிறது.
தமிழகத்தில் கஜா புயல் தாக்கியதை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்தித்து நிவாரண பணிகளுக்கு உதவி கோரினார். இதுவரை எந்த அறிவிப்பும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. அதே நேரத்தில் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடவும் பிரதமர் வரவில்லை. ஆனால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு நடத்த கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது கஜா புயல் பாதிப்பு குறித்தும், மேகதாது விவகாரம் குறித்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் மோடியிடம் நேரில் விளக்கம் அளிக்க உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆளுநரின் இந்த சந்திப்புக்கு பின்னர் மத்திய அரசிடம் இருந்து சில அறிவிப்புகள் வெளியாகலாம் என பேசப்படுகிறது.