தமிழ்நாடு
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு மசோதா: ஆளுனர் ஒப்புதல்
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு குறித்த மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். சமீபத்தில் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு குறித்த மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா சட்டமன்றத்தில் நிறைவேறிய நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனை அடுத்து தேர்தலுக்கு பின் புதிய அரசு ஆட்சி அமைந்தவுடன் இந்த சட்ட மசோதா அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிமுக பாமக கூட்டணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றே கூறி வருகின்றனர்.
வன்னியர்களுக்கு 10.5 அதைவிட இட ஒதுக்கீடு குறித்த மசோதா தேர்தலுக்காக நிறைவேற்றப்பட்டதாகவும் இந்த மசோதா தற்காலிகமானது என்றும், தேர்தலுக்குப்பின் கைவிடப்பட வாய்ப்பிருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்த நிலையில் தற்போது ஆளுநர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது