வேலைவாய்ப்பு

தமிழக அரசு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/ மாநகராட்சிகளுக்குட்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சேலம் மாவட்டம்

மொத்த காலியிடங்கள்: 1570

வேலை: அமைப்பாளர், சமையல் உதவியாளர், சமையர்

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1. அமைப்பாளர் – 451
2. சமையலர் – 138
3. சமையல் உதவியாளர் – 981

வயது: 01.09.2020 தேதியின் படி, பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 21 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினர்18 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஐந்தாம் வகுப்பு, பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் எட்டாவது வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் (தேர்ச்சி/தோல்வி) எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்படும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பிக்காத தங்களுக்குத் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 22.09.2020 முதல் 30.09.2020 மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் தபால் மூலமாகவோ தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்ப்பிருக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2020/09/2020092343.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.09.2020.

 

seithichurul

Trending

Exit mobile version