வேலைவாய்ப்பு

டிப்பளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை!

Published

on

தமிழ்நாடு நகரம் மற்றும் திட்டமிடல் துறையில் காலியிடங்கள் 53 உள்ளது. டிராப்ட்ஸ்மேன் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குக் கட்டிட கலையியல் துறையில் டிப்பளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் விண்ணப்பியுங்கள்.

வேலை: DRAUGHTSMAN, GRADE-III, டிராப்ட்ஸ்மேன்

மாதம் சம்பளம்: ரூ.35,400 – 1,12,400

வயது: 01.17.2018 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகளை அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

கல்வித்தகுதி: நகரத் திட்டமிடல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்து 3 ஆண்டுப் பணி அனுபவம் அல்லது கட்டடக்கலை துறையில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தமிழ்மொழியில் போதுமான அளவில் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இரு தாள்கள் கொண்டது.

எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 03.02.2019

எழுத்துத்தேர்வு நடைபெறும் மையங்கள்: சென்னை, கோவை, மதுரை

தேர்வு விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசித் தேதி: 28.11.2018

மேலும் முழு விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_30_notyfn_Draughtsman_Grade_III.pdf என்ற லிங்க கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version