தொழில்நுட்பம்
விரைவில் Google+ சேவையை நிறுத்து வாய்ப்பு.. அதிர்ச்சி அளிக்கும் காரணம்..!
கூகுள் நிறுவனம் அதன் Google+ சமுக வலைத்தளச் சேவையினை அடுத்து வர இருக்கும் 10 மாதத்தில் நிறுத்த உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
Google+ தளத்தின் 5 லட்சம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடு போனதே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
இதனை உறுதி செய்த கூகுள் நிறுவனம் அது கண்டறியப்பட்டுப் பேட்ச் செய்யப்பட்டதாகவும், இந்த விவரங்கள் தற்போது வரை யாரும் தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் இதற்கு முன்பு இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடுகளால் எதிலும் சிக்கியதில்லை. முதன் முறையாக இப்படித் தரவுகள் திருடு போயிருப்பதைக் கண்டு கூகுள் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.