இந்தியா
கூகுள் இந்தியாவில் பணிநீக்க நடவடிக்கை.. 453 பேர் வேலை காலி..!
கூகுள் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது கூகுள் இந்தியாவில் பணி செய்யும் 453 பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட சில காரணங்களால் பெரிய நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன என்பதும் குறிப்பாக கூகுள் நிறுவனம் 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக சுந்தர் பிச்சை அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று தெரிந்தது.
இந்த 12 ஆயிரம் ஊழியர்களில் சில இந்தியர்களும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி கூகுள் இந்தியாவில் பணிபுரியும் 453 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்னஞ்சல்கள் மூலம் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான ஈவுத்தொகை விரைவில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு 12000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் நடவடிக்கையை எடுத்த போது சுந்தர் பிச்சை இடம் மீண்டும் வேலைக்கு நடவடிக்கை இருக்குமா என்று கேட்டபோது, ‘எதிர்காலத்தை கணிப்பது கடினம் வென்றும் என்னால் மிகச் சரியாக வேலை நீக்க நடவடிக்கையை எடுக்க மாட்டோம் என்று உறுதிமொழி கூற முடியாது என்றும் தெரிவித்திருந்தார். அப்போதே இன்னும் வேலைநீக்க நடவடிக்கை கூகுளில் தொடரும் என்று கணிக்கப்பட்ட நிலையில் தற்போது கூகுள் இந்தியாவில் 45 3 பேர்களின் வேலை காலியாகி உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் குருகுராம் அலுவலகத்தில் பணிபுரியும் கமல் டேம் என்பவர் தான் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் நேற்று வரை கூகுளின் ஒரு அங்கமாக இருந்த நான் இன்று வேலையில்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு நான் வேலை தேடும் முயற்சியை ஈடுபட்டு இருக்கிறேன் என்றும் உங்கள் ஆதரவை கோருகிறேன் என்று சமூகவலை பதிவு செய்துள்ளார். இதேபோல் பலர் கூகுள் நிறுவனத்தில் பணி இழந்தவர்கள் வேறு வேலையை தேடி வரும் பரிதாப நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.