உலகம்

ஒமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி: கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!

Published

on

ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து கூகுள் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கூகுள் உள்பட பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்யும்படி அறிவித்து இருந்தது என்பதும் இதனை அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று கூகுள் நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சுற்றறிக்கையில் கூகுள் நிறுவனம் அனைத்து ஊழியர்களும் வாரத்தில் மூன்று நாட்கள் சுழற்சி முறையில் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் தற்போது உலகின் 24 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து கூகுள் நிறுவனம் தனது முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளது. மீண்டும் சில மாதங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே மறு அறிவிப்பு வரும் வரை ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டாம் என கூகுள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

கூகுள் மட்டுமின்றி மற்ற முன்னணி ஐடி நிறுவனங்களும் இன்னும் சில மாதங்களுக்கு வீட்டிலிருந்தே பணிசெய்ய தங்களது ஊழியர்களை வலியுறுத்தி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version