தொழில்நுட்பம்
இன்று 23வது பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள்!
இணைய உலகில் அனைவரும் விரும்பி பயன்படுத்தும் கூகுள் தேடு பொறி நிறுவனத்துக்கு இன்று 23 வயது. அதற்கான சிறப்பு டூடுளையும் இன்று வெளியிட்டுள்ளது கூகுள்.
1998-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ம் தேதி கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டது. நிறுவனத்தைத் தொடங்கி 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பிறந்த தேதியைச் செப்டம்பர் 27-ம் தேதிக்கு நிறுவனம் மாற்றியது.
கூகுள் நிறுவனம் செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் என்பவர்களால் தொடங்கப்பட்டது. இன்று உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தும் தேடு பொறி நிறுவனமாக உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகத் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை இருந்தார். இப்போது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் சுந்தர் பிச்சை உள்ளார்.
2015-ம் ஆண்டு ஆல்பாபெட் நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆல்பாபெட் தொடங்கிய பிறகு கூகுள் மற்றும் அதன் பிற துணை நிறுவனங்கள் ஆல்பாபெட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு தாய் நிறுவனமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.