தமிழ்நாடு
திமுக ஆட்சியில் நல்லா மழை பெய்யுது பாத்தீங்களா…- அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்
திமுக ஆட்சியில் இருக்கும் காரணத்தினால் தமிழ்நாட்டில் நன்றாக மழை பெய்து வருவதாக மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது தென் மேற்குப் பருவ மழைக் காலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களிலும் தொடர்ச்சியாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதுமே கோடைக் காலத்தின் வெப்பமான சூழல் மாறி, மாலை மற்றும் இரவு நேரங்களில் குளிர்ச்சியாக உள்ளது.
இதைக் குறிப்பிட்டுப் பேசியுள்ள அமைச்சர் பெரியசாமி, ‘முன்பெல்லாம் எப்போது கலைஞர் கருணாநிதியின் ஆட்சி வருமோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் நன்றாக மழை பெய்யும். அவர் வழி வந்தவர் தான் தளபதி ஸ்டாலின். தற்போது அவர் ஆட்சிப் பொறுப்பு ஏற்றிருக்கிறார். இப்போதும் நன்றாக மழை பெய்து வருகிறது.
இதன் மூலம் நாடே செழிப்பாக உள்ளது. இதன் மூலம் தெரிவது என்னவென்றால், திமுக ஆட்சிக்கு வந்தால் நன்றாக மழை பெய்து நாடு செழிப்பாக இருக்கும் என்பது தான்’ எனக் கூறியுள்ளார்.