வணிகம்
ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. செப்டம்பர் 30-க்குள் இதை செய்திடுக!
புதிய பென்ஷன் திட்டத்தில் இருப்பவர்கள், பழைய பென்ஷன் திட்டத்திற்கு மாற விருப்பம் இருந்தால், 2020 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
2004 ஜனவரிக்கு முன்பு அரசு பணிகளில் சேர்ந்தவர்கள் பழைய பென்ஷன் திட்டத்திலும், அதன் பிறகு பணியில் செர்ந்தவர்கள் புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் வருவார்கள்.
புதிய பென்ஷன் திட்டத்தில் ஊழியர்களுக்கு பெரும் அளவில் பயனில்லை. குடும்ப பென்ஷன் கிடைக்காது. பங்குச்சந்தை உள்ளிட்டவற்றில் பங்களிப்புகள் முதலீடு செய்வதால் அதிக ரிஸ்க் உள்ளது. எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. எனவே பழைய பென்ஷன் திட்டத்தின் கீழ் ஊழியர்களைக் கொண்டு செல்லுங்கள் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை வழுத்து வருகிறது.
அதனை பரிசீலனை செய்யும் விதமாக, தெற்கு ரயில்வே பழைய பென்ஷன் திட்டத்திற்கு மாற விரும்புபவர்களின் பட்டியலைச் சேகரித்து வருகிறது. ஒருவேலை இதற்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்தால் 2.50 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.