தமிழ்நாடு
ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு நல்ல செய்தி!
கோவை: தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டுக்காக 3.1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 15,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இதுகுறித்து கோவை கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், “மொத்தம் வந்த 3.1 லட்சம் விண்ணப்பங்களில் 2.8 லட்சம் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. கோவையில் வந்த விண்ணப்பங்களும் சரிபார்க்கப்பட்டு, இந்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்கப்படும்” என்றார்.
இந்த செய்தி, புதிய ரேஷன் கார்டுக்காக காத்திருந்த பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.