இந்தியா
ரோலக்ஸ் வாட்ச்.. உடல் முழுக்க 20 கிலோ தங்க நகை.. வித்தியாசமான யாத்திரையில் அகோரி பாபா!
ஹரித்வார்: உத்தர பிரதேசத்தை சேர்ந்த அகோரி பாபா ஒருவர் உடல் முழுக்க தங்க நகைகளை மாட்டிக்கொண்டு யாத்திரை செல்கிறார். இந்தியா முழுக்க இப்போது இவர் வைரலாகி உள்ளார்.
கோல்டன் பூரி பாபா என்று அழைக்கப்படும் இவரது இயற்பெயர் சுதிர் மக்கர். பெரும் பணக்காரரான இவர் தொழிலதிபராக இருந்தார். இவர் தன்னுடைய வேலைகளைவிட்டு தற்போது அகோரி பாபாவாக மாறியுள்ளார்.
இன்றோடு இவர் 25வது முறையாக யாத்திரை செல்கிறார். உத்தர பிரதேசத்தில் இருந்து ஹரித்வார் நோக்கி இவர் யாத்திரை செல்கிறார். இதற்கு கன்வார் யாத்திரை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
![sudhir-kumar-makkar-also-known-as-golden-baba-561618 - Bhoomitoday வித்தியாசமான யாத்திரையில் அகோரி பாபா](http://seithichurul.com/wp-content/uploads/2018/08/sudhir-kumar-makkar-also-known-as-golden-baba-561618-300x272.jpg)
வித்தியாசமான யாத்திரையில் அகோரி பாபா
சென்றமுறை 19 கிலோ நகையுடன் யாத்திரை செய்த இவர் இந்தமுறை 25 கிலோ நகையுடன் யாத்திரை செய்கிறார். இதன் மதிப்பு 60 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. அதேபோல் 27 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்சும் கட்டியுள்ளார்.
இவருக்கு உத்தர பிரதேச போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. மேலும், இந்த பயணம் தனக்கு ஆன்மீக தேடலை அளிப்பதாக பேட்டியளித்துள்ளார்.