தமிழ்நாடு

கோகுல்ராஜ் கொலை வழக்கு: முதல் குற்றவாளிக்கு 3 ஆயுள் தண்டனை என தீர்ப்பு!

Published

on

தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை என்பது குறித்து நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜ் மற்றும் அருண் ஆகியோர்களுக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குமார், சதீஸ்குமார், ரகு, ரஞ்சீத், செல்வராஜ் ஆகிய 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் பிரபு மற்றும் கிரிதர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனையும் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்திரசேகரன் என்பவருக்கு ஒரு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

7 ஆண்டுகளாக விசாரணை செய்யப்பட்டு நிலுவையில் இருந்த இந்த வழக்கின் தீர்ப்பு மற்றும் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version