சினிமா செய்திகள்
‘மாஸ்டர்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு த்ரிஷாவால் மிஸ் ஆனது: கண்ணதாசன் மகன்!
தளபதி விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருந்த நிலையில் த்ரிஷாவால் அந்த வாய்ப்பு மிஸ் ஆனதாக கவிஞர் கண்ணதாசனின் மகன் கோபி கண்ணதாசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் ‘மாஸ்டர்’ திரை படத்தில் நடிப்பதற்காக என்னை லோகேஷ் கனகராஜ் அணுகினார். அவர் கேட்ட தேதியும் நான் கொடுத்து விட்டேன். ஆனால் அதே நேரத்தில் த்ரிஷா நடித்த ராங்கி என்ற திரைப்படத்திலும் நான் சிபிஐ அதிகாரி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.
நான் ‘மாஸ்டர்’ படத்துக்காக கொடுத்த அதே நாளில் த்ரிஷாவின் ’ராங்கி’ படத்தின் படப்பிடிப்பு இருந்ததால் முன்கூட்டியே ஒப்புக் கொண்ட படம் என்பதால் ‘மாஸ்டர்’ படத்தில் இருந்து விலகினேன் என்று கூறினார்.
த்ரிஷா படத்தில் நடித்த காரணத்தினால் தன்னால் மாஸ்டர் படத்தில் நடிக்க முடியாத ஆதங்கத்தை அவர் அந்த பேட்டியில் தெரிவித்தார். மேலும் கோபி கண்ணதாசன் தற்போது பொன்னியின் செல்வன் உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் ஏற்கனவே ’இவன் வேற மாதிரி’ உள்பட ஒருசில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.