தமிழ்நாடு
ஆடுகளைத் திருடி ஆட்டின் உரிமையாளரிடமே பேரம் பேசி விற்க முயன்ற 2 பேர் கைது!
திருச்சி மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி, ஆடு வளர்த்து விற்று வருபவரான இவரது ஆடுகளை நான்கு பேர் கூட்டு சேர்ந்து திருடியுள்ளனர்.
திருடிய ஆட்டை காந்தி மார்க்கெட் பகுதியில் விற்க முயன்றுள்ளனர். அப்போது ஆட்டின் உரிமையாளர் என்று தெரியாமல் கந்தசாமியடமே விலை பேசியுள்ளனர்.
ஆடுகளை பார்த்து அதிர்ச்சியடைந்த கந்தசாமி, தனது ஆட்டை திருடியது மட்டுமல்லாமல் தன்னிடமே விலைபேசி விற்க முயன்றனர் என்று காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதை அடுத்து ஆடு விற்பனை செய்யப்பட்ட பகுதிக்குச் சென்ற காவல் துறையினர், இருவரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர். திருடப்பட்ட ஆடுகள் கந்தாசாமியிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.