இந்தியா

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை.. முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Published

on

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

5 மாநில தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கோவாவில் பிப்ரவரி 14-ம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே பல்வேறு கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவா மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி, தேர்தலுக்கான வாக்குறுதிகளை வழங்கியது. அதில் முக்கியமானதாக வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.

6 மாதங்களில் நில உரிமை வழங்குவோம். டெல்லியைப் போலவே கோவாவின் ஒவ்வொரு கிராமங்களிலும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இலவச கிளினிக்குகள் திறக்கப்படும்.

விவசாயிகள் பிரச்சனைகளுக்குத்தீர்வு காணப்படும். 24 மணி நேரமும் இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் சேவை வழங்கப்படும் என டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version