இந்தியா

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு புற்றுநோய் முற்றிவிட்டது: அமைச்சர் தகவல்!

Published

on

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு புற்றுநோய் முற்றிவிட்டதாக அம்மாநில அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவா முதல்வராக உள்ள பாஜகவின் மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் கடந்த வருடம் அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் மீண்டும் டெல்லி எயிம்ஸ் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்நிலையில் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர் கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்கு சிகிச்சையை முடித்த மனோகர் பாரிக்கர் கடந்த 26-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனையடுத்து அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், தொடர்ந்து அவரது வீட்டில் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும் எனவும் கோவா முதல்வர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் மனோகர் பாரிக்கருக்கு புற்றுநோய் முற்றி விட்டதாக, கோவாவின் நகர திட்டத்துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் தற்போது தெரிவித்துள்ளார். மேலும் புற்றுநோய் முற்றியுள்ள போதும், மக்களுக்காக பாரிக்கர் உழைத்துக் கொண்டிருப்பதாக விஜய் சர்தேசாய் குறிப்பிட்டார்.

Trending

Exit mobile version