தமிழ்நாடு

பேச்சுவார்த்தை முடியும் முன்பே வெளியான வேட்பாளர் பட்டியல்: ஜிகே வாசன் அதிருப்தி!

Published

on

அதிமுக கூட்டணியில் உள்ள ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கடந்த சில நாட்களாக தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் தங்களுக்கு 4 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே திடீரென நேற்று மாலை அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதனால் ஜிகே வாசன் தரப்பு அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது

இருப்பினும் அதிமுக வேட்பாளர் பட்டியலில் ஈரோடு கிழக்கு மற்றும் பட்டுகோட்டை ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை என்றும் அந்த இரண்டு தொகுதிகள் தமாகவுக்காக அதிமுக ஒதுக்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது

அதிமுக கூட்டணியில் தாங்கள் 4 தொகுதி கேட்டு பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைவர் வெளியிடுவதற்கு ஜிகே வாசன் அதிருப்தி தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அந்த இரண்டு தொகுதிகளை மட்டும் பெற்றுக்கொண்டு கூட்டணியில் தொடர்வாரா? அல்லது அதிரடி முடிவு எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

கடந்த சில மாதங்களுக்கு முன் அதிமுக சார்பில் ஜிகே வாசனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி ஒதுக்கப்பட்டது என்பது தெரிந்ததே

Trending

Exit mobile version