தமிழ்நாடு

முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்த பெண் திடீர் மாயம்: எங்கே சென்றார் தெரியுமா?

Published

on

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த பெண் ஒருவர் திடீரென மாயமானதை அடுத்து அவர் இருக்குமிடம் தெரிந்து மணமகன் அதிர்ச்சி அடைந்த சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

கோவையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் யாமினி என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் நடந்து மூன்று மாதங்களில் திடீரென யாமினி காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரித்தபோது யாமினிக்கு ஏற்கனவே சிவகுமார் என்பவருடன் திருமணம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் முதல் திருமணத்தை மறைத்து தன்னை இரண்டாவது திருமணம் செய்த யாமினி மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விக்னேஷ் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து நிலையில் 2வது திருமணம் செய்த விக்னேஷை விட்டுவிட்டு முதல் திருமணம் செய்த சிவக்குமாருடன் யாமினி சென்று விட்டது தெரியவந்தது. இதனையடுத்து சிவகுமார்- யாமினியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் யாமினியின் பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் யாமினி மற்றும் சிவக்குமாரை தேடி வருவதாகவும் தகவல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து அவருடன் மூன்று மாதங்கள் வாழ்ந்துவிட்டு பின்னர் மீண்டும் முதல் கணவரிடமே சென்று விட்ட பெண் ஒருவரால் கோவை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version