தமிழ்நாடு

திருமணமான ஆணிடம் கற்பை இழந்த கல்லூரி மாணவி: இது காதலா அல்லது காமமா?

Published

on

கல்லூரி மாணவி ஒருவர் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு ஆணிடம் ஏமாந்து தனது கற்பை இழந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

குமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தனது சகோதரியை பார்க்க திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அனிஸ் என்பவரும் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட தனது சகோதரியை பார்க்க வந்துள்ளார். அப்போது இருவரின் சகோதரிகளுக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையை பெற இருவரும் உள்ளே சென்றபோது நர்ஸ் குழந்தையை மாற்றி இருவரிடமும் கொடுத்துவிட்டார். பின்னர் சுதாரித்துக்கொண்டு இருவரும் குழந்தையை மாற்றிக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இருவரும் சிரித்திக்கொண்டு குழந்தையை மாற்றிக்கொண்டனர். பின்னர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து செல்போனில் மணிக்கணக்கில் பேசி காதலை வளர்த்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அனிஸ் அந்த கல்லூரி மாணவிக்கு போன் செய்து திருமணம் செய்துகொள்ளலாம் என திருவனத்தபுரத்துக்கு அழைத்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் போய் கூறிவிட்டு திருவனந்தபுரம் சென்றுவிட்டார். அங்கு அனிஸ் அந்த மாணவியை ஓட்டலுக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் பாலக்காடு, கோவைக்கு அழைத்துச்சென்று அங்கு வைத்தும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இந்த சூழ்நிலையில் தங்கள் மகளை காணவில்லை என அந்த மாணவியின் பெற்றோர் களியக்காவிளை போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து அந்த மாணவியை குழித்துறைக்கு கொண்டு வந்து விட்டு கேராளாவுக்கு தப்பித்து ஓடி தலைமறைவாகி விட்டான் அனிஸ். பின்னர் அந்த மாணவி வீட்டிற்கு வந்து நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து குழித்துறை மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர் கேரளா சென்று அனிஸை கைது செய்த போலீசார் அவனிடம் விசாரணை நடத்தியதில் அவன் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அந்த மாணவி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறவில்லை எனவும், தவறான உறவுக்காகத்தான் அவள் என்னிடம் பழகினாள் எனவும் அனிஸ் கூறியுள்ளான். இதனால் இந்த வழக்கில் குழப்பம் நீடித்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version