தமிழ்நாடு

இரண்டு பேரும் விடிய விடிய என்னை… கதறி அழும் பள்ளி மாணவி: குமரியில் ஒரு பொள்ளாச்சி சம்பவம்!

Published

on

பொள்ளாச்சியில் ஒரு கும்பல் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்னமும் தமிழக மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் வருகிறது. இந்நிலையில் இதனை நினைவுபடுத்தும் மேலும் ஒரு சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு இளைஞர் தனது நண்பருடன் சேர்ந்து மாணவி வீட்டில் தனியாக இருக்கும் போது கடத்தியுள்ளார். இதனையறிந்த மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளிக்க அவர்கள் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மாணவியை கடத்திய அந்த நபர்கள் தூத்துக்குடி அருகே வல்லநாடு பகுதியில் உள்ள யாரும் வசிக்காத ஒரு உறவினர் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடத்திச்சென்ற நபர்களின் செல்போன் மூலம் அந்த இடத்தை அடைந்த போலீசார் மாணவியை மீட்டனர். கடத்திய இளைஞர்களையும் கைது செய்தனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி காவல்துறையில் அளித்த புகாரில், இரண்டு பேரும் விடிய விடிய தன்னை அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதனை செல்போனில் படம் எடுத்ததாகவும் கதறி அழுதபடி கூறியுள்ளார். மேலும் ஆள் நடமாட்டம் இல்லாததால், அலறல் சத்தம் போட்டும் அந்தப் பகுதியில் யாரும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

தற்போது மாணவியை சிகிச்சைக்காக ஆசரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவியை பலாத்காரம் செய்த இளைஞர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவர்களது செல்போனை பறிமுதல் செய்தனர். மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து அதனை செல்போனில் படம்பிடித்த இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version