இந்தியா

கார் ஒட்டுனரை நடுரோட்டில் பளார் பளார் என அறைந்த இளம்பெண்… அதிர்ச்சி வீடியோ….

Published

on

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருவதுண்டு.. சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும். சில வீடியோக்கள் ஆச்சர்யப்படுத்தும். சில வீடியோக்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாறாக சில வீடியோக்கள் நமக்கு அதிர்ச்சி கொடுக்கும்.

பொது இடங்களில் மிகவும் அநாகரிகமாக நடந்து கொள்ளும் வீடியோதான் சமூகவலைத்தளங்களில் அதிகமாக வெளியாகி நெட்டிசன்களின் கண்டனத்தை பெறுவதுண்டு. தற்போது அதுபோன்ற வீடியோ ஒன்று வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் லக்னோ மாநிலத்தில் நடுரோட்டில் ஒரு இளம்பெண் ஒரு கார் டிரைவரின் கன்னத்தில் பளார் பளார் என அடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அவர் நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு இதை செய்ய டிராஃபிக் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தன் காரை அந்த ஓட்டுனர் இடித்துவிட்டதாக அவர் புகார் கூறினார். அப்பெண்ணை தடுக்க ஒருவர் முயன்ற போது அவரின் கன்னத்திலும் அப்பெண் அறைந்தார். போலீசார் தலையிட்டும் அப்பெண் அடங்கவில்லை.

இந்த வீடியோவை பார்த்ததும் நெட்டிசன்கள் அப்பெண்ணை கண்டபடி திட்டி வருகின்றனர்.

 

 

seithichurul

Trending

Exit mobile version