இந்தியா

3000 போலீசார் தேடிவந்த பாலியல் வன்முறை குற்றவாளி தற்கொலை!

Published

on

6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்த குற்றவாளி ஒருவரை 3,000 போலீசார் தேடி வந்த நிலையில் அந்த குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னால் ஹைதராபாத்தில் 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ராஜூ என்பவரை காவல்துறையினர் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த இந்த குற்றவாளியை பிடிப்பதற்காக 3,000 போலீசார் ஈடுபட்டிருந்தனர் என்றும் இவருக்கு மது பழக்கம் இருப்பதால் 2200 மதுக்கடைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி ராஜு எங்கே இருக்கிறார் என்பது குறித்த தகவல் தருபவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 3000 போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி ராஜூ, காவல்துறையினர் இருந்து தப்பிக்க முடியாது என ஒரு கட்டத்தில் தெரியவந்ததை அடுத்து இன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ராஜுவை 3,000 போலீசார் தேடி வந்த நிலையில் அந்த குற்றவாளி திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்யப்பட்டிருப்பது தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version