தமிழ்நாடு
17 வயது சிறுமியை தொடர்ந்து சீரழித்த வாலிபர்: போக்சோ சட்டத்தில் கைது!
![Girl 3 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/01/Girl-3.jpg)
தேனி அருகே 17 வயது சிறுமியை வாலிபர் ஒருவன் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமியை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வெங்கட்டேஷ் என்ற 20 வயதான வாலிபர் ஒருவன் காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 1-ஆம் தேதி வெங்கடேஷ் சிறுமியை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை சிறுமி யாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து வெங்கடேஷன் சிறுமியை உடலுறுவுக்கு கட்டாயப்பட்டுத்தி வந்துள்ளார். இதனையடுத்து சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். தன்னை தொடர்ந்து வெங்கடேஷன் அழைத்து வருவதாகவும் சிறுமி கூறியதை அடுத்து சிறுமியின் பெற்றோர் சிறுமியை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று புகார் அளித்தனர்.
சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வெங்கடேஷனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.