செய்திகள்

பசங்களுக்கு போட்டியாக ரயிலில் சாகசம் பண்ணும் இளம்பெண்.. அதிர்ச்சி வீடியோ…

Published

on

கல்லூரி மாணவர்கள் பேருந்தில் செல்லும்போது படிக்கெட்டில் நின்று பயணிப்பது, ஓடும் பேருந்தில் ஓடி வந்து ஏறுவது, பேருந்தின் பின்னால் ஏறி நின்று கொண்டே செல்வது, பேருந்தின் மேற் கூரை மீது அமர்ந்து பயணிப்பது என பல அலப்பரைகளை செய்வார்கள். இள ரத்தம் என்பதால் உயிருக்கு ஆபத்தான இது போன்ற விஷயங்கள் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அதில் கிடைக்கும் திரில் மட்டுமே அவர்களுக்கு முக்கியமாய் படுகிறது.

பேருந்து மட்டும்தான் என்றில்லை. ரயிலிலும் இதே கூத்துதான். சென்னை போன்ற நகரங்களில் லோக்கல் டிரெய்ன் என அழைக்கப்படும் உள்ளூர் ரயிலில் படிக்கெட்டில் நின்று பயணிப்பது, ஓடும் ரயில் ஏறுவது மற்றும் இறங்குவது என சாகசம் செய்யும் இளைஞர்கள் ஏராளம். ரயில்வே துறை எவ்வளவு அறிவுரை கூறினாலும் அவர்களின் மண்டையில் அது ஏறாது.

தற்போது இளம்பெண்களும் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர் என்பதுதான் பேரதிர்ச்சியாக இருக்கிறது. வட சென்னைக்கு அருகேயுள்ள கவரப்பேட்டை எனும் இடத்தில் ஓடும் ரயிலில் ஒரு பள்ளி மாணவி ஏறுவதோடு மட்டுமில்லாமல், காலை வைத்து தரையில் உராய்ந்து கொண்டே செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை சாகசம் என அவர்கள் கருதிகிறார்கள். கொஞ்சம் ஸ்லிப் ஆகி தண்டவாளத்தில் விழுந்தால் அடுத்த நொடியே மரணம் என்பது அவர்களுக்கு புரியவில்லை போல!…

seithichurul

Trending

Exit mobile version