இந்தியா
பல்லு விளக்கிய 18 வயது இளம்பெண் மரணம்… அட இப்படியும் நடக்குமா?..
எல்லோரும் காலையில் எழுந்ததும் பல துலக்குகிறோம். ஆனால், அதுவே ஒரு இளம்பெண்ணின் உயிரை பறித்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?. அப்படி ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாராவி பகுதியில் வசித்து வந்தவர் அப்சனா கான். இவருக்கு வயது 18. இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் பல் துலக்கிய போது ஒரு வித்தியாசமான வாசனையை உணர்ந்துள்ளார். அதன் பின்னரே அவர் விலக்கியது பல்பொடி அல்ல, எலி மருந்து என்பது அவருக்கு தெரியவந்துள்ளது. ஆனால், அம்மாவிடம் சொன்னால் திட்டுவார் என பயந்து அவர் அதை கூறவில்லை.
இது நடந்து சில நாட்களில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட அருகில் இருந்த மருத்துமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார், ஆனால், மருத்துவர் கொடுத்த மருந்தில் அவர் வயிற்று வலி தீரவில்லை. அதன்பின்னரே நடந்த விஷயத்தை தாயிடம் அப்பெண் கூற ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 2 மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அப்பெண் மரணமடைந்தார். இந்த சம்பவம் தாராவி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.