தமிழ்நாடு

ஆயிரம் விளக்கு தொகுதியில் கேள்வி கேட்ட சிறுமி: சிரித்த முகத்துடன் பதில் கூறிய குஷ்பு

Published

on

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்புவிடம் அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் சரமாரியாக ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியதை அடுத்து அந்த சிறுமிக்கு பொறுமையுடன் சிரித்த முகத்துடன் குஷ்பு பதில் கூறியது அந்த பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகை குஷ்பு என்று ஆயிரம்விளக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த போது சிறுமி ஒருவர் அவரிடம் ’எங்கள் தொகுதிக்கு பல அரசியல்வாதிகள் வாக்கு கேட்டு வந்திருக்கிறார்கள், ஆனால் வெற்றி பெற்ற பின் திரும்ப வருவதே இல்லை. நீங்கள் எங்கள் தொகுதியில் வெற்றி பெற்றால் என்ன செய்வீர்கள்? மற்ற அரசியல்வாதிகள் போல் தொகுதி பக்கம் வராமல் இருப்பீர்களா? என்று சரமாரியாக கேள்வி கேட்டார்.

சிறுமி ஆங்கிலத்தில் கேட்ட கேட்ட நிலையில் பொறுமையாக ஆங்கிலம் மற்றும் தமிழில் பதில் கூறிய குஷ்பு, ‘மற்ற அரசியல்வாதிகள் போல் நான் இருக்க மாட்டேன், வெற்றி பெற்றாலும் அடிக்கடி தொகுதி பக்கம் வருவேன். நான் இந்த தொகுதிக்கு ஏற்கனவே பல உதவிகள் செய்து உள்ளேன். குறிப்பாக சென்னை வெள்ளத்தின் போது இந்த பகுதியின் பின்புறம் உள்ள பகுதியில் உள்ள மக்களுக்கு 21 நாட்கள் நான் உணவு வழங்கி உள்ளேன்.

என்னிடம் கேள்வி கேட்க உங்களுக்கு எல்லா விதமான உரிமையும் உள்ளது. அதற்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று சிரித்த முகத்துடன் பதில் கூறினார்., அவரது பதிலுக்கு திருப்தி அடைந்த அந்த சிறுமியை கையெடுத்து கும்பிட்டு அவருக்கு நன்றி தெரிவித்தார். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/kushboosundar/posts/290238815795888

seithichurul

Trending

Exit mobile version