தமிழ்நாடு

பொதுக்குழு மற்றும் மாநாடு ஒத்திவைப்பு: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!

Published

on

மார்ச் 7ஆம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் மார்ச் 14-ஆம் தேதி நடைபெற இருந்த திமுக மாநில மாநாடு ஆகிய இரண்டும் ஒத்திவைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துரைமுருகன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியதாவது: தலைமை தேர்தல் ஆணையத்தால் தமிழகம் மற்றும் புதுவை சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் மார்ச் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம், மார்ச் 14ஆம் தேதி அன்று திருச்சியில் நடைபெற இருந்த திமுக மாநில மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்

மேலும் திமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். டிஆர் பாலு தலைமையிலான இந்த குழுவில் கேஎன் நேரு, பெரியசாமி, பொன்முடி, ஆர்எஸ் பாரதி, வேலு, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் சுமார் ஒரு மாதம் மட்டுமே இருப்பதே இன்னும் ஒருசில நாட்களில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு தீவிர தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version