தமிழ்நாடு
பொதுக்குழு மற்றும் மாநாடு ஒத்திவைப்பு: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
மார்ச் 7ஆம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் மார்ச் 14-ஆம் தேதி நடைபெற இருந்த திமுக மாநில மாநாடு ஆகிய இரண்டும் ஒத்திவைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துரைமுருகன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியதாவது: தலைமை தேர்தல் ஆணையத்தால் தமிழகம் மற்றும் புதுவை சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் மார்ச் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம், மார்ச் 14ஆம் தேதி அன்று திருச்சியில் நடைபெற இருந்த திமுக மாநில மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்