தமிழ்நாடு
இராஜபாளையம் தொகுதி கிடைக்காததால் உருக்கமான டுவிட் போட்ட கெளதமி!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் இணைந்த கௌதமி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு அந்த தொகுதியில் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். அந்த பகுதி மக்களுடன் அவர் ஒன்றிப் பழகினார் என்பதும் ராஜபாளையம் தொகுதியில் நடந்த பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராஜபாளையம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை என்பதும் அதற்கு பதிலாக விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இராஜபாளையம் தொகுதி கிடைக்காத ஏமாற்றத்தில் உருக்கமான டுவிட் ஒன்றை கௌதமி பதிவு செய்துள்ளார் அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக உங்களில் ஒருவராக என்னை பாவித்து கடந்த 5 மாதங்களாக தங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்தீர்கள். என்றும் எனக்கு நீங்கள் காட்டிய உண்மையான அன்புக்கு தலைவணங்கி, உங்களுக்கு கட்டுப்பட்டிருக்கிறேன்.
உங்கள் அன்பின் வாயிலாக கிடைத்த இந்த உறவானது என்றும் நிலைத்திருக்கும் என உறுதியளிக்கிறேன். நீங்கள் எவ்வாறு உயர்வான வாழ்க்கையை வாழ வேண்டுமோ அதற்காக உங்களுடன் என்றும் பாடுபடுவேன்.
என்றும் அன்புடன்
உங்கள் கௌதமி
இவ்வாறு அந்த டுவிட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.