சினிமா செய்திகள்
விண்ணைத்தாண்டி வருவாயா பார்ட் 2-க்காக இணையும் சிம்பு – கௌதம் மேனன்..?
விண்ணைத்தாண்டி வருவாயா… அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கும் திரைப்படத்தில் சிலம்பரசன் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2010ஆம் ஆண்டு சிலம்பரசன் த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் தமிழில் ஒரு சிறந்த காதல் படமாக வெளியானது. சிலம்பரசன் மற்றும் த்ரிஷாவின் நடிப்பு அப்போது பலராலும் பராட்டப்பட்டது. இப்போது வரை சிலம்பரசனின் சிறந்த படங்களில் ஒன்றாக விண்ணைத்தாண்டி வருவாயா படம் இடம் பெற்றுள்ளது.
அதன் பின் அச்சம் என்பது மடமையடா பல்வேறு தடைகளை தாண்டி வெளியானது. என்றாலும் அது ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவு பெரிய வரவேற்பை பெறவில்லை.
தற்போது மீண்டும் சிம்பு, கௌதம் மேனன் கூட்டணி பல வருடங்கள் கழித்து மீண்டும் இணைய இருக்கிறது. இது விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகமாக அமையுமா அல்லது புதிய கதையாக இருக்குமா என்பது குறித்த தகவல்களை படக்குழு வெளியிடவில்லை. எதுவாக இருந்தாலும் இந்த இருவர் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் தற்போதே ரசிகர்களிடம் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.