சினிமா செய்திகள்
பைனான்ஸ் பிரச்னை… விலகிய கெளதம் மேனன்- ஒரு வழியாக ரிலீஸாகிறது ‘நரகாசூரன்’..!
![naragasooran - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/naragasooran.jpg)
பைனான்ஸ் பிரச்னையால் நீண்ட நாட்களாகக் கிடப்பில் கிடந்த நரகாசூரன் திரைப்படம் தற்போது வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளது.
அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் நரகாசூரன். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன், கெளதம் மேனன் மற்றும் பத்ரி கஸ்தூரி ஆகிய மூவரும் இணைந்து தயாரித்தனர்.
நிதிச் சிக்கலால் சில ஆண்டுகளாகவே நராகாசூரன் படம் வெளியிட முடியாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது கார்த்திக் நரேன் தனுஷ்- மாளவிகா மோகனன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். கெளதம் மேனன் நிதிச்சிக்கலை சமாளிக்க நரகாசூரன் படத்தின் தயாரிப்புக் குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார்.
இதனால் நராகாசூரன் படம் ஓடிடி தளத்தில் வெளியாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டதாம். மார்ச் மாதம் மத்தியில் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.