சினிமா செய்திகள்

கவுதம் மேனைன் அடுத்த பட டைட்டில்: சூர்யா படத்தின் 2ஆம் பாகமா?

Published

on

கவுதம் மேனன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் சூர்யா நடித்த ‘காக்க காக்க’ படத்தின் இரண்டாம் பாகமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு கவுதம் மேனன் நடிப்பில் சூர்யா நடித்த திரைப்படம் ’காக்க காக்க’. இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தில் அன்பு செல்வன் என்ற கேரக்டரில் சூர்யா நடித்திருப்பார் என்பது படம் பார்த்தவர்கள் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் கவுதம் மேனன் நடிக்க உள்ள புதிய திரைப்படத்திற்கு ’அன்புச்செல்வன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படமும் ஒரு போலீஸ் ஸ்டோரி கதையம்சம் கொண்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படம் சூர்யாவின் ’காக்க காக்க’ படத்தின் இரண்டாம் பாகமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புச்செல்வன் திரைப்படத்தை வினோத் குமார் என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு சிவா பத்மாயன் என்பவர் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கவுதம் மேனன் காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்து இருப்பதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இருந்து தெரிய வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு விறுவிறுப்பாக நடைபெறும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Trending

Exit mobile version