சினிமா செய்திகள்

அடுத்தடுத்து வெளியாகும் கெளதம் மேனனின் 3 திரைப்படங்கள்!

Published

on

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் ’மின்னலே’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு வருடத்திற்கு குறைந்தது இரண்டு படங்கள் என்று ரிலீஸ் செய்து கொண்டிருந்தார்.

ஆனால் கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பின் அவருக்கு ஒரு சிறு இடைவெளி ஏற்பட்டது. மூன்று ஆண்டுகள் கழித்து அஜீத் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படத்தை இயக்கிய பின்னர் மீண்டும் சுறுசுறுப்பானார். ஆனால் திடீரென அவருக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை காரணமாக மீண்டும் இடைவெளி ஏற்பட்டது.

இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு பின்னர் அவரது திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அவர் அனைத்து பிரச்சினைகளில் இருந்து மீண்டு வந்து விட்டார் என்றும் இதனை அடுத்து விரைவில் அவரது படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகும் போவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள செய்திகளின்படி கௌதம் மேனன் இயக்கிய ’ஜோஸ்வா இமை போல் காக்க’ என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸாக இருப்பதாகவும் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வரும் கூறப்படுகிறது. அதேபோல் விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய ’துருவ நட்சத்திரம்’ என்ற திரைப்படமும் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் தற்போது சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கவுள்ள ’நதிகளிலே நீராடும் சூரியன்’ திரைப்படமும் மூன்றே மாதத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எனவே இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்தடுத்து சிறிய இடைவெளியில் கௌதம் மேனனின் மூன்று படங்கள் வெளியாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Trending

Exit mobile version